tag:blogger.com,1999:blog-21582836493786670882024-03-08T15:55:21.062-08:00ஜோதிபாரதியின் கவிதைகள்எனது எண்ண உணர்வுகளின் வெளிப்பாடுஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-88412830536782387022009-05-28T06:43:00.000-07:002009-05-28T07:20:04.387-07:00தமிழர்களுக்கு செவி சாய்க்காத இந்தியா, இனப்படுகொலையை மூடி மறைக்க முயற்சி<a href="http://3.bp.blogspot.com/_QIuFWFyY-b8/Sh6XR4ajeKI/AAAAAAAAA8k/d6xXAzCvPvM/s1600-h/493px-IndiaTamilNadu.png"><img id="BLOGGER_PHOTO_ID_5340872541565319330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 329px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_QIuFWFyY-b8/Sh6XR4ajeKI/AAAAAAAAA8k/d6xXAzCvPvM/s400/493px-IndiaTamilNadu.png" border="0" /></a> <span style="color:#ff0000;">விடுதலைப் போரை வேரறுத்து, மனித உரிமைகளை மரிக்கச் செய்யும் இந்தியா</span><br /><div><br />இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் சிங்கள ராணுவம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது.<br /><br />இதுபற்றி ஐ.நா. சபையில் மனித உரிமை குழு விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.<br /><br />சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகள் முயற்சியால் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.<br /><br />கடந்த 2 நாட்களாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடந்தது.<br /><br />தொடக்கத்தில் இருந்தே தீர்மானத்துக்கு எதிராக அதே நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொண்டது. இதேபோல சீனா, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளும் இலங்கையை ஆதரித்தன.<br /><br />நேற்று இரவு ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 17 நாடுகளும், எதிர்த்து இந்தியா உள்பட 22 நாடுகளும் ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.<br /><br />எனவே மனித உரிமை மீறல் பற்றி ஐ.நா.சபை மனித உரிமை குழு விசாரணை நடத்த தேவை இல்லை.<br /><br />இந்த தீர்மானம் வந்ததுமே இலங்கை பல்வேறு நாடுகளையும் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. மனித உரிமை குழுவில் உறுப்பினராக உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, ரஷியா, கியூபா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 22 நாடுகள் இலங்கையை ஆதரித்து உள்ளன.<br /><br />சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் இலங்கைக்கு எதிராக ஓட்டு போட்டன. 8 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.<br /><br />இந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து இந்தியா ஓட்டு போடக்கூடாது என்று தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை புறக்கணித்து இந்தியா இலங்கையை ஆதரித்து உள்ளது.<br /><br />இதே விவாதத்தின்போது இலங்கை தனது நாட்டு மறு சீரமைப்புக்கு சர்வதேச நாடுகளின் நிதி உதவியை கோரும் தீர்மானத்தையும் கொண்டு வந்தது.<br /><br />இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஓட்டு போட்டன. ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. எனவே இலங்கைக்கு சர்வதேச நிதியுதவி தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.</div><div> </div><div> </div><div> </div><div> </div><div> </div>அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-49986114885475489692009-05-28T05:23:00.000-07:002009-05-28T05:35:59.348-07:00கறுப்பு ஆடுகள்<div align="center"><a href="http://4.bp.blogspot.com/_QIuFWFyY-b8/Sh6EAHX74pI/AAAAAAAAA8c/D3WatdNZmLc/s1600-h/BlackSheep.94122437.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5340851345622295186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 278px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_QIuFWFyY-b8/Sh6EAHX74pI/AAAAAAAAA8c/D3WatdNZmLc/s400/BlackSheep.94122437.gif" border="0" /></a><br /><div align="center"><br /><br /><br />வளர்த்து விட்டோம்<br /><br />நமக்குத் தெரிவதில்லை<br /><br />பேரம் படிந்து விட்டால்<br /><br />சோரம் போய்விடும்<br /><br />கறுப்பு ஆடுகள் </div><br /><br /><br /><br /><br /><br /><br /><br /></div>அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-62523131939838372632009-05-22T02:57:00.000-07:002009-05-22T06:53:53.894-07:00அய். நாவில் குப்பை கொட்டும் பொய் நா(ய்)(க்)கள்அய். நாவில் குப்பை கொட்டும் பொய் நா(ய்)(க்)கள் <br />
<br />
<br />
அய். நா சபைக்கு யார் தலைமை செயலாராகத் தகுதி படைத்தவர்கள் என்பது உலக மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனென்றால் அவர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.(நேரடியாக தேர்ந்தெடுப்பவர்களுக்கே துரோகிகளைத் தெரிவதில்லை) <br />
<br />
ஓர் இனப்படுகொலையை திட்டமிட்டு வேடிக்கை பார்க்கும் மனிதாபிமானமற்ற மனிதப் பிறவிகள் இந்தப் பதவிக்கு வர தகுதியற்றவர்கள் என்பது மட்டும் நமது பார்வையில் தெரிகிறது. அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களும் மனிதாபிமானமற்ற ஈனப்பிறவிகளாக இருப்பது இவ்வுலகில் மனிதம் மரித்துக் கொண்டிருப்பதை புலப்படுத்துகிறது. அதற்கு இந்த முன்னாள் தலைமை செயலாளரின் கோரிக்கை ஓர் எடுத்துக்காட்டு. <br />
<br />
<br />
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் வாயிலாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.<br />
<br />
<br />
யுத்தத்தில், வெற்றிகள் பிரச்சினைகளின் தீர்வாக அமையாது என்பதை அரசாங்கம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இழப்புகளை ஈடு செய்வதன் வழியாகவும் அவர்களை அவசரமாக நல்ல நிலைக்கு கொண்டுவருவதன் மூலமாகவும்தான் தீர்வுக்கு கொண்டுவரமுடியும். <br />
<br />
இலங்கை அரசாங்கம் அப்படி செய்யத்தவறினால் வருங்காலத்தின் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்’’ தெரிவித்துள்ளார்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-8371920867566938922009-05-13T07:19:00.000-07:002009-05-13T07:35:53.200-07:00சிங்கப்பூர் - சந்திப்பு - கானா பிரபா<p>அன்பின் சிங்கை வாழ் வலையுலகத் தோழமைகளே, </p><p><span class="">நமது சக <span class="">பதிவர் <a href="http://kanapraba.blogspot.com/">மடத்துவாசல் பிள்ளையாரடி</a> </span><a href="http://www.kanapraba.com/">றேடியோஸ்பதி </a> <a href="http://www.kanapraba.com/">திரு கானா பிரபா</a> அவர்கள் தற்போது சிங்கப்பூர் வந்துள்ளார். நம்மையெல்லாம் சந்திக்க ஆவலாக இருக்கிறார். நாளை(14.05.2009) இரவு 7.30 மணிக்கு காரைக்குடி உணவகம் அருகே உள்ள காளி அம்மன் கோவிலுக்கு அருகே சந்திக்க முடிவு செய்துள்ளோம். இயன்றவர்கள் கலந்துகொள்ளலாம். </span></p><p>நன்றி!</p><p><span class="">தகவலுக்கு நன்றி திரு வடுவூர் குமார் </span></p><p><span class=""></span> </p><p><span class=""></span> </p><p><span class=""></span> </p>அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-65775389767949546372008-10-15T17:26:00.000-07:002008-10-15T17:33:51.666-07:00பலிபீடம் பாருக்குள்ளே நல்ல நாடாகும்!<span class=""></span><br />விடிவெள்ளி தெரிகிறது<br /><br />வந்து பார்<br /><br /><br />உன் நிலத்தின் பொழியை<br /><br />நீயே அளந்து கொள்வாய்<br /><br /><br />நீ உழுது நட்ட பயிர்<br /><br />கதிரானதும்<br /><br />நீயே அறுத்து<br /><br />உன் குதிரில் இடுவாய்<br /><br /><br />நீ சேர்த்த சொத்து<br /><br />உன்னோடு இருக்கும்<br /><br /><br />சொல்லிக்கொள்ளாமல்<br /><br />அள்ளிக்கொண்டு ஓடும்<br /><br />நிலை மாறும்<br /><br /><br />உன் இடத்தில் நீ உலவ<br /><br />உதவாக்கரை ஒப்புதல்<br /><br />தேவையில்லை<br /><br /><br />வேடர்கள் வீழ்ந்து போவர்<br /><br />வெள்ளி நிலா உலவும்<br /><br />விண்மீன்கள் சாமரம் வீசும்<br /><br />வேங்கைகள் நாடாளும்<br /><br />வீர மறக் கொடி பறக்கும்<br /><br /><br />தமிழ் வெள்ளம் அருவியாகும்<br /><br />பாலாறாய்ப் பெருக்கெடுக்கும்<br /><br /><br />மல்லிகை<br /><br />மண மணக்கும்<br /><br />மாஞ்சோலைக்<br /><br />குயில்கள் கூவும்<br /><br /><br />வண்ணமயில்<br /><br />தோகை விரித்தாடும்<br /><br /><br />உன் பூமியில்<br /><br />காகம் மட்டுமே கரையும்<br /><br /><br />ஓலங்கள் ஒழிந்து<br /><br />ஏலங்கள் குவியும்<br /><br /><br />துயரங்கள் துடைத்து<br /><br />துலாபாரம் பெருகும்<br /><br /><br />கள்ளிச் செடிகளும்<br /><br />கவி பாடும்<br /><br /><br />பூங்கொத்துகள்<br /><br />புன்னகை<br /><br />பரிமாறிக் கொள்ளும்<br /><br /><br />தென்றல் மட்டும்<br /><br />உன்னைத் தீண்டும்<br /><br /><br />வானவில் உனக்குத்<br /><br />தோரணம் கட்டும்<br /><br /><br />மேகங்கள்<br /><br />பன்னீர் தெளிக்கும்<br /><br /><br />முல்லைப் பூக்களுக்கும்<br /><br />முடிசூட்டப்படும்<br /><br /><br />நீ நாடிய நாடெல்லாம்<br /><br />உன் நாட்டை நாடும்<br /><br /><br />பூவரசு<br /><br />பொன்னரசாகும்<br /><br /><br />வையம் போற்றும்<br /><br />வல்லரசாகும்<br /><br /><br />எள்ளி நகைத்தவர்<br /><br />ஏமாந்து போவர்<br /><br /><br />விதைக்காமல்<br /><br />முளைக் கொட்டும்<br /><br /><br />பலிபீடம்<br /><br />பாருக்குள்ளே நல்ல நாடாகும்<br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span>அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com39tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-83122014068572938722008-04-17T14:58:00.000-07:002008-04-17T15:36:19.342-07:00என்று வாழப்போகிறாய் மானத்துடன் மனித இனமாய்...!?இறுகிப்போன இதயத்தில்<br /><br />அருகிப்போன குருதி.<br /><br />தேங்கி நிற்கிறது -நாங்கள் இங்கு<br /><br />ஏங்கி நிற்கையில்.<br /><br />தேக்கிய தண்ணீரில்<br /><br />தீர்ந்து போனது<br /><br />உன் தாகம் மட்டுமல்ல<br /><br />மனித நேயமும் தான்.<br /><br />மணமோடு வாழாவிட்டாலும்<br /><br />பிணமாக வாழ்ந்தெதைக் கண்டாய்?<br /><br />சினமும் சீற்றமும்<br /><br />பிணத்துக்கும் வருமோ?<br /><br />தண்ணீர் கேட்டால்<br /><br />வேதனையில் வெந்நீர் ஊற்றும்<br /><br />வெற்றுக் களிமண் நீ!<br /><br />தொற்று நோயாய்<br /><br />எங்கள் வாழ்வில்!<br /><br />என்றென்றும் வாலாட்டும்<br /><br />வானரமாய்!<br /><br />நாளெல்லாம்<br /><br />நச்சரிக்கும் நரி நீ!<br /><br />வரிந்து கட்டிக்கொண்டு<br /><br />நிற்கிறாய் மானம் இழந்து!<br /><br />இனத்திற்கு மானமுண்டு<br /><br />பிணத்திற்கு மானமுண்டோ?<br /><br />என்று வாழப்போகிறாய்<br /><br />மானத்துடன் மனித இனமாய்...!?<br /><br /><br /><br />அன்புடன்,<br />அத்திவெட்டி ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-89748438102300884962008-04-15T20:46:00.000-07:002009-03-23T03:53:31.727-07:00வழிந்தோடிய வறட்டு கௌரவம்...!<strong></strong><br /><strong></strong><br /><strong>வழிந்தோடிய வறட்டு கௌரவம்</strong><br /><br />வழியாத விழிகளும்<br /><br />வழிமேல்<br /><br />விழி வைத்தது -அவள்<br /><br />வருவாள் என.<br /><br />வந்தவள் -ஒரு<br /><br />வார்த்தை கூட பேச<br /><br />வசதியாக மறந்து போக,<br /><br />வறட்டு கௌரவம்<br /><br />வழிய போய்<br /><br />வழிந்துவிட்டு வந்தது.<br /><br />வழியே வந்தவர்கள் -ஒரு<br /><br />வழியாய் பார்க்கும் சமயத்தில்...!<br /><br /><br /><br />அன்புடன்,<br />அத்திவெட்டி ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-75188223885179118842008-04-05T22:15:00.000-07:002008-04-05T22:21:55.119-07:00வண்டுகளுக்குக் காத்திருந்த மலர்!<strong>வண்டுகளுக்குக் காத்திருந்த மலர்! <br /></strong><br />பூவின் இதழ்களைத்<br /><br />தொட்டுத் தொட்டு<br /><br />தேனெடுத்த வண்டு <br /><br />பூவுக்கு வியர்த்திருந்ததால்<br /><br />வெண் சாமரம் வீசத்<br /><br />தவறவில்லை<br /><br />பூவின் இதழ்கள்<br /><br />சிறகடித்து<br /><br />வண்டைப் பறக்கச் செய்து<br /><br />அயல் மகரந்தச் சேர்க்கைக்கு<br /><br />அனுப்பி வைத்துவிட்டு<br /><br />அடுத்த வண்டின் வருகைக்காகக்<br /><br />காத்திருந்தது.<br /><br /><br /><br />அன்புடன்,<br />அத்திவெட்டி ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-2579670849015556602008-04-03T21:07:00.000-07:002008-04-03T21:12:54.346-07:00பூந்தோட்டத்தில் சாதிமல்லிப் பூச்செடிகள்பத்தியிலே பாத்தி<br /><br />பந்தியும் உண்டு தண்ணீர்.<br /><br /><br />தோட்டக்காரன்<br /><br />இறைக்க இறைக்க குடித்தது<br /><br />ஒரு சாதிமல்லி.<br /><br /><br />இறைக்காமல் குடித்துவிட்டு<br /><br />இளக்காரமாகப் பார்த்தது<br /><br />இன்னொன்று.<br /><br /><br />கவலையே படாமல்<br /><br />இருந்த மற்ற சாதிப் பூச்செடிகளை -வேர்<br /><br />கரையான் அரித்துத் தின்றது. <br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-58162075678779425312008-04-03T01:19:00.000-07:002008-04-03T01:23:05.995-07:00வழியும் குறுக்கீடும்எனது தடத்தைப்<br /><br />பார்த்துக்கொண்டு போனேன்<br /><br />எதிரே வந்தவர்கள்<br /><br />ஒதுங்கி வழிவிட்டார்கள்.<br /><br /><br />எதிரே வந்தவர்களைப் <br /><br />பார்த்துக் கொண்டு<br /><br />போனபோது,<br /><br />அவர்கள் எனக்கு<br /><br />வழி விடவில்லை.<br /><br /><br />நான் ஒதுங்கிப் போக<br /><br />வேண்டியதாகிவிட்டது.<br /><br /><br /><br />அன்புடன்,<br />அத்திவெட்டி ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-61520788844374065782008-03-20T16:37:00.000-07:002008-03-20T16:44:50.607-07:00தயக்கத்துக்கு முதல் அடி வைத்தாகிவிட்டதுஎட்டு மாதக் குழந்தை<br /><br />எடுத்தடி வைக்க<br /><br />நடைவண்டியில்<br /><br />நடை பயணம்<br /><br />மகிழ்ச்சி ஆரவாரத்தில்<br /><br />மருண்டு தள்ளியதால்<br /><br />வண்டி குழந்தையை<br /><br />இழுத்துக்கொண்டு நின்றது<br /><br />அம்மா அப்பாவின்<br /><br />ஆரவாரத்துக்கிடையே<br /><br />வைக்காத முதல் அடியை<br /><br />வைத்தது குழந்தை <br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-28889170418923262982008-03-19T17:09:00.000-07:002008-03-19T17:15:34.575-07:00விருந்தும் மருந்தும்வீட்டிற்கு வந்த<br /><br />ஆசிரியருக்கு<br /><br />விருந்தோம்ப<br /><br />ஏதுமில்லை என<br /><br />வெதும்பிய<br /><br />கலைச்செல்வன்<br /><br />அவசரமாகத் தென்னை<br /><br />மரமேறி இளநீர்<br /><br />பறிக்கையில்<br /><br />விழுந்தது இளநீர்<br /><br />அவனையும் பறித்துக்கொண்டு.<br /><br /><br />அவசரச் சிகிச்சைப் பிரிவில்<br /><br />சேர்த்த ஆசிரியர்<br /><br />பிரியா சோகத்துடன்.<br /><br /><br />அன்பு மட்டும்<br /><br />வெளிப்பட்டது<br /><br />சாரை சாரையாக...!<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-53730143271627443152008-03-19T08:53:00.000-07:002008-03-19T09:00:46.902-07:00சம்மந்திகளின் பிரசவ வேதனைபிரசவ அறையில்<br /><br />பிரசவ வேதனையில்<br /><br />துடித்துக்கொண்டிருந்த பெண்<br /><br />மருத்துவரையும் தாதிகளையும்<br /><br />உதைத்தார்.<br /><br />சாத்தப்பட்ட<br /><br />அறைக்கு வெளியே<br /><br />சாந்தமாகக் கணவன்.<br /><br />ஆண்குழந்தை தான் -இல்லை<br /><br />பெண்குழந்தை தான் -என<br /><br />சம்மந்திகளின் சண்டை.<br /><br />நான் தான்<br /><br />முதலில் குழந்தையைப்<br /><br />பெற்றுக்கொள்வேன் என்ற<br /><br />கூக்குரல் வேறு.<br /><br />வேண்டாம் வம்பு என்று<br /><br />வெறுமனே நின்ற<br /><br />கணவனிடன் கொடுத்து<br /><br />கைப்பணம் பெற்றுக்கொண்டார் தாதி.<br /><br />ஆறு மாதத்திலேயே தெரியும்<br /><br />ஆண் பிள்ளை என்று<br /><br />அழகாய் உரைத்தார்<br /><br />குழந்தையின் தந்தை.<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-26344290826726800792008-03-18T19:43:00.000-07:002008-03-18T19:52:21.260-07:00செக்குமாடு<strong>செக்குமாடு </strong><br /><strong></strong><br />கீறல் விழுந்த<br /><br />இசைத்தட்டு<br /><br /><br />ஆர வட்டம்<br /><br />அழியாக் கோலம்<br /><br /><br />சுகமென நினைத்து<br /><br />சுற்றிச் சுற்றி<br /><br /><br />சூடான எண்ணெய்<br /><br />வழ வழப் பிசுக்குடன்<br /><br />பிழிந்தாலும் வராது<br /><br /><br />சுரண்டினாலும்<br /><br />வராத புண்ணாக்கு<br /><br />வெல்லம் மட்டும் கேட்டது <br /><br />செக்கு மாடு<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-62833748368581841462008-03-14T04:43:00.000-07:002008-04-04T19:07:54.473-07:00சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்தினம் தினம்<br /><br />கழுகாய் பருந்தாய்<br /><br />வட்டமிடும்வஞ்சக வானூர்தி<br /><br />கருவறுக்க<br /><br />கோழிக்குஞ்சாய்<br /><br />எம் மக்கள்<br /><br /><br />இடிமுழக்கம் எங்கு பார்த்தாலும்<br /><br />ஈழத்தமிழகத்தில் -குண்டுகளை<br /><br />அள்ளி எரிந்து ஆர்ப்பரிக்கும்<br /><br />அரக்கர் கூட்டம்<br /><br /><br />கைக்கெட்டும் தூரத்தில்<br /><br />எம் உறவுகளின் தாய்த்தமிழ்நாடு<br /><br /><br />கேட்காமல் கேட்கும்<br /><br />எம் உறவுகளின் ஓலங்கள்<br /><br /><br />இவன் வாழும் நாடோ காந்தியின்<br /><br />அகிம்சை வழி<br /><br /><br />நேருவின் சமாதனப்புறா-அதுவோ<br /><br />முதுகில் அடித்தவனை<br /><br />முழுவதும் தொழும்<br /><br /><br />தாய்த்தமிழ் நாடென்ற பேர் எதற்கோ?<br /><br /><br />கூட்டுப் பயிற்சியும்<br /><br />கொஞ்சிக்குலாவலும்<br /><br />நம் குல நாசம்<br /><br />செய்வதற்கேயன்றி வேறெதற்கு?<br /><br /><br />ரகசியப் பேச்சுக்களும்<br /><br />ராடார் தளவாடங்களும்<br /><br />ஒளிவு மறைவற்ற<br /><br />ஒப்புதல் வாக்குமூலங்களும் -எம்<br /><br />நலிவடைந்த உறவுகளை<br /><br />நசுக்கத்தானே?<br /><br /><br />சமாதானம் என்று சொல்லி<br /><br />சவ வண்டியனுப்பும்<br /><br />சறுக்கிய தேசத்தின்<br /><br />ஆற்றாமைத் தமிழன்<br /><br />அழுகிறான் இங்கே<br /><br />அவனுக்கு நாடிதுவே<br /><br />வேறில்லை அவனியிலே<br /><br /><br />கண்ணீருக்கு தாழ்ப்பாள் போடும்<br /><br />கயவர்கள் கூட்டம்<br /><br />கட்சிக்கொடி ஏந்திக்<br /><br />கல்லாக்கட்டும்<br /><br /><br />உள்ளொன்று வைத்து<br /><br />புறமொன்று பேசும்<br /><br />ஒப்பனைத் தமிழன்<br /><br />ஒளிரா நிலவு அமாவாசை<br /><br />உணர்வில்லா உறக்கம் பாவம்<br /><br />உடுக்கை மானம் உண்டோ அறியேன்...?<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதி<br /><br />எழில் நிலா இணைய இதழ் 29.03.2008<br />பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008<br />லங்காஸ்ரீ கவிதைகள் இணைய இதழ் 31.03.2008அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-43934455522758527282008-03-13T02:41:00.000-07:002008-04-04T19:07:12.000-07:00தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்!வெள்ளையைப் பார்த்து<br /><br />வெளிரிப் போனது<br /><br />தன் நிறம் மறந்து<br /><br /><br />மஞ்சளைப் பார்த்து<br /><br />மறைத்துக் கொண்டது -தன்<br /><br />மகிமையை<br /><br /><br />கறுப்பைப் பார்த்து<br /><br />கவிழ்ந்து விட்டது<br /><br />கடைச் சரக்காகி<br /><br /><br />சாயம் வெளுத்துக்கொண்டு<br /><br />மகிழ்ந்திருந்தது<br /><br />தன்னையே மாற்றிக் கொண்டு<br /><br />சமூகப் பண்பாடு மறந்த<br /><br />மாந்தளிர்...!<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதி<br /><br />வார்ப்பு இணைய இதழ் 31.03.2008<br />கீற்று இணைய இதழ் 01.04.2008<br />முத்துக்கமலம் இணைய இதழ் 02.04.2008<br />பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008<br />லங்காஸ்ரீ கவிதைகள் 18.03.2008அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-39826424535772676522008-03-12T01:02:00.000-07:002008-03-24T07:05:28.087-07:00நிற்காமல் நின்றுகொண்டு...பள்ளி விட்டதும்<br /><br />எங்கும் நிற்காமல்<br /><br />வீட்டுக்கு வந்துவிடு<br /><br />அம்மா சொன்னது<br /><br />மனதில் ஒலித்தது<br /><br />காத்திருந்தேன் பேருந்துக்காக<br /><br /><br />இருட்டியதும் வந்தது<br /><br />பேருந்து இறுமாப்புடன்<br /><br /><br />இடம் கிடைக்குமா என்ற<br /><br />ஏக்கத்துடன் படியில்<br /><br />உந்தி ஏறியதும்<br /><br />நிற்காமல் பறந்தனர்<br /><br />நடத்துனரும் ஓட்டுனரும்<br /><br /><br />மதியம் உண்ட களைப்பில்<br /><br />மயங்கிப்போய் நான்<br /><br />இருக்கையில் இருக்க<br /><br />இடமில்லாமல்<br /><br />நின்று கொண்டே விழுந்தேன்<br /><br />தூக்கம் சொக்கியதும்<br /><br /><br />இடம் வந்ததும்<br /><br />இறங்கிக்கொண்டேன்<br /><br />எதுவுமே தெரியாத இருட்டு<br /><br />இருந்தாலும் கண்டேன்<br /><br />தெரியாத தெருவும்<br /><br />எரியாத விளக்கும்<br /><br />அதற்குத்தான்<br /><br />தெருவிளக்கென்று பேரோ?<br /><br />கும்மிருட்டில் காத்திருந்த<br /><br />சிற்றொளிக் கைவிளக்கு<br /><br />தம்பி என்று தழுவிக்கொண்டது<br /><br />என் தாய்.<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதி<br /><br />வார்ப்பு இணைய இதழ் 03.03.2008<br />கீற்று இணைய இதழ்அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-70518303423219129092008-03-08T21:37:00.000-08:002008-03-08T23:25:16.725-08:00நெஞ்சு பொறுக்குதில்லையேவேற்று மொழியில்<br /><br />பேசிக்கொண்டு வந்த<br /><br />தமிழர்கள் இருவர்<br /><br />இடையிடையே<br /><br />தன் தாய்த் தமிழில்<br /><br />காய்களை மட்டும்<br /><br />கடித்துத் துப்பினார்கள்<br /><br />அக்கம் பக்கத்தினருக்கு<br /><br />மட்டும் கசந்தது<br /><br /><br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-64488385458286486652008-03-07T20:17:00.000-08:002008-03-07T20:20:10.345-08:00பேராசைஆஸ்தி உள்ளவனுக்கு<br /><br />அஸ்தி கரைக்க<br /><br />அகர வரிசையில்<br /><br />ஆயிரம் பேர்<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-71025554219529932462008-03-07T03:46:00.000-08:002008-03-07T03:50:08.932-08:00முன்னுக்கு வாருங்கள்என்னைப் பின்பற்றுகிறவர்களை<br /><br />எனக்குப் பிடிக்காது<br /><br />கழுதை<br /><br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-83036371632993331922008-03-06T16:16:00.000-08:002008-03-06T16:20:06.814-08:00மாசமோ மார்கழி மாசம்பார்த்தேன் ரசித்தேன்<br /><br />பசுமையானவளை<br /><br />அவளுக்கு வியர்த்திருந்தது<br /><br />வெண்பனியோ என்று<br /><br />நினைத்துக் கொண்டேன்<br /><br />நான் தொட்டவுடன்<br /><br />வெட்கப்பட்டாள்<br /><br />தொட்டாற் சுருங்கி<br /><br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-42774444449206249232008-03-05T20:10:00.000-08:002008-03-05T20:14:15.349-08:00என்னை மறந்துவிட்டீர்களே?வேகாத வெயில்<br /><br />வெந்த தணல்<br /><br />தண்ணீரே இல்லை<br /><br />என்னை நினைத்து<br /><br />எத்தனை கூக்குரல்கள்<br /><br />ஒரு மழை பெய்ததும் -ஏன்<br /><br />என்னை மறந்து விட்டீர்கள்?<br /><br />காவிரிப் பிரச்சனை<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-82202146319121128062008-03-04T16:17:00.000-08:002008-04-15T20:17:09.570-07:00சிங்கப்பூர் ஜுரோங் தீவுசிங்கை ஈன்றெடுத்தக் குழந்தை<br />சிங்கை இராணுவத்தின் தத்துப்பிள்ளை<br /><br />மண்ணால் உருவான<br />மாபெரும் சமுத்திரம்<br /><br />சிறப்பு அனுமதியுடன் -ஒரு<br />சிறிய பயணம்<br /><br />கப்பல் பட்டறைகளின்<br />கற்பனை உலகம்<br />கற்பனை செய்ய முடியாக் களப்பணிகள்<br /><br />சாரக்கட்டுகளில் சறுக்கு விளையாட்டு<br />கோரம் நடக்கும் என குறி கூட தெரியாமல்<br /><br />கொடிய வாயுக்களிடம்<br />குசலம் விசாரிப்பு<br /><br />எல்லா வேலைகளும் இங்கு கிடக்கும்<br />எண்ணெய் தொட்டிகளும் இதில் அடக்கம்<br /><br />வெல்டிங் வேலையும்<br />விவேக சிந்தனையும்<br /><br />மின் தூக்கி இல்லா மிடுக்கான பயணம்<br />பாரந்தூக்கி மட்டுமே இப்போது<br />நம் பாரத்தை தாங்கி<br /><br />எறும்புகளாய்<br />எம் உழைக்கும் வர்க்கம்<br /><br />எண்ணிலடங்கா எண்ணெய் நிறுவனங்கள்<br />என்னைப் பிரமிக்க வைக்கும் எழில்<br /><br />பூங்கா போன்ற காட்சி -அதற்கு<br />புகை மட்டுமே சாட்சி<br /><br />ஓசோன் காக்கும் ஆசான் -அந்த<br />ஒரே நாடு சிங்கை<br /><br />மாசு இல்லை இங்கு -மண்<br />தூசு இல்லை எங்கும்<br /><br />பொருளாதாரப் பொழில் -அது<br />பொங்கிவரும் எழில்<br /><br />விசாலமான சாலையில்<br />வாகனங்கள் மட்டும் காற்றுடன்<br /><br />வெற்றிடத்தை மட்டும் பார்த்தேன்<br />வேறு யாரும் அங்கு இல்லை<br /><br />தீயணைப்பு வண்டிகளின்<br />தியாக அணிவகுப்பு<br /><br />அவசர நிலைக்கான<br />அயராத விழிப்பு நிலை<br /><br />முதலுதவிக்கான<br />முன்னேற்பாடு<br /><br />உழைக்கும் வர்க்கமே<br />உழலும் சொர்க்கமே<br /><br />வந்தது நமக்கு வியர்வை -அது<br />தந்தது நமக்கு உயர்வை<br /><br />குருதி வருமென்றாலும் -அது<br />இறுதி அல்லவே<br /><br />உழைப்பு மட்டுமே உறுதி -நம்<br />உன்னத வாழ்க்கையைக் கருதி<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதி<br /><br /><a href="http://www.vaarppu.com/view.php?poem_id=1099">வார்ப்பு இணைய இதழ் 10.02.2008 </a><br /><a href="http://www.thinnai.com/?module=displaystory&story_id=30802074&format=html">திண்ணை இணைய இதழ் 07.02.2008 </a><br /><a href="http://www.keetru.com/literature/poems/jothi_bharathi_1.php">கீற்று இணைய இதழ்</a><br /><a href="http://tamil.sify.com/fullstory.php?id=14641224">தமிழ் சிஃபி சித்திரைச் சிறப்பிதழ் 2008</a>அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-48068619833024551072008-02-29T03:24:00.000-08:002008-02-29T04:00:34.520-08:00உல்லாசக் கப்பல்<a href="http://3.bp.blogspot.com/_QIuFWFyY-b8/R8fz2MuhlBI/AAAAAAAAARE/YLoaIPiuc6c/s1600-h/superstar_virgo.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5172370809513153554" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_QIuFWFyY-b8/R8fz2MuhlBI/AAAAAAAAARE/YLoaIPiuc6c/s400/superstar_virgo.jpg" border="0" /></a><br /><div></div><br /><div></div><br /><div>ஓவியமா அல்லது உண்மையா<br />ஒரு கணம் அசந்துவிட்டேன்<br /><br />கடவுச்சீட்டுடன்<br />கையில் பையோடு<br /><br />களிப்புடனும் -சில<br />கற்பனைகளுடனும்<br /><br />முதல் அனுபவம்<br />முத்தாய்ப்பாக<br /><br />நட்சத்திரக் கப்பல்<br />நற்பயணம்<br /><br />நுழைவாயிலில்<br />நல்வரவு வரவேற்பு<br /><br />கன்னியர்கள் காளையர்கள்<br />களிப்புடனே<br /><br />புன்முறுவல் பூத்தார்கள்<br />நறுமணமும் வீச<br /><br />படமெடுத்துவிட்டர்கள்<br />பார்க்காதபோதே<br /><br />வெள்ளி நிலவு<br />துள்ளி வரும் நேரம்<br /><br />வேகமாய் நடந்து<br />அறை எண் அறிந்து<br />அழகாய் திறந்தமர்ந்து<br />அளவளாவினோம்<br />நிகழ்ச்சிநிரல் கையேட்டுடன்<br /><br />வழுக்கும் கண்ணாடி<br />வழவழக்கும் மெத்தை<br />வண்ண வண்ணத் தரை விரிப்பு<br /><br />பகட்டை ரசிக்கும் போதே<br />பயணம் தொடங்கியது தெரியவில்லை<br /><br />உணவுக்கு ஓரிடமா ஈரிடமா?<br />நாம் விரும்பும் இந்திய உணவு<br />நமக்கு பிடிக்கும் சீன உணவு<br />நமது சாயலில் மலேசிய உணவு<br />மெச்சும் படி மேற்கத்திய உணவு<br />சத்துள்ள ஜப்பானிய உணவு<br /><br />உலகமே இங்கு பணியில்<br />ஒவ்வொரு நாட்டவரும்<br />ஒரு தொனியில்<br /><br />கரீபியன் பாடகர்களின்<br />கவின் மிகு கானங்களும்<br /><br />ஆஸ்திரேலிய அழகிகளின்<br />அரங்கம் நிறை ஆட்டங்களும்<br /><br />குதிரைப் பந்தையங்களும்<br />குதூகலங்களும்<br /><br />சூதாட்டக் கூடத்தில்<br />சீனர்களெல்லாம் ஐக்கியம்<br /><br />உற்சாக பானத்துடன்<br />ஒரு கூட்டம்<br /><br />அட்டைகள் விளையாட<br />அட்டைபோல் ஒட்டிக்கொண்டது<br />ஒரு கூட்டம்<br /><br />டிஸ்கொத்தே நடனங்களும்<br />தரை அதிரும் ஆட்டங்களும்<br /><br />பூப்பந்தாட்டமும்<br />பூவையர் கூட்டமும்<br /><br />கூடைப்பந்தாட்டமும்<br />கோல்ப் விளையாட்டும்<br /><br />நீச்சல் குளத்தினிலே<br />நீராடல் உண்டு<br /><br />இரவுப்பயணத்திலே<br />எட்டுத்திக்கும் இருட்டு<br /><br />எட்டிப்பார்த்தால்<br />எறும்பு போல் படகுகளும்<br />எங்காவது ஒரு கப்பலும்<br /><br />நிகழ்ச்சிகளை நெறிபடுத்த<br />நேரமே கிடைக்கவில்லை<br /><br />ஓட்டமும் நடையுமாய் -நான்<br />ஒரு பொழுதும் நிற்கவே இல்லை<br /><br />எப்படியோ முடிந்து விட்டது<br />இரண்டுநாள்<br />எனக்குத் தெரியவே இல்லை<br /><br />எதுவுமே வாங்கவில்லை<br />எனக்கு நேரமும் இல்லை<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதி<a href="http://4.bp.blogspot.com/_QIuFWFyY-b8/R8ftwcuhk_I/AAAAAAAAAQ0/aGRnGVN9NGs/s1600-h/superstar_virgo.jpg"></a></div>அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2158283649378667088.post-33532956978091478672008-02-28T18:03:00.000-08:002008-02-28T18:10:13.801-08:00நல்ல நாளும் பெரிய நாளும்புத்தாண்டு வந்தது<br /><br />பிறந்தநாள் வந்தது<br /><br />தீபாவளி வந்தது<br /><br />பொங்கல் வந்தது -அட<br /><br />அட்சயத் திருதியை கூட வந்தது<br /><br />அவள் அழுகை மட்டும்<br /><br />நிற்கவே இல்லை -அவளுக்கு<br /><br />பொன்னுக்கு வீங்கி!<br /><br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதிஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com1